search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் உண்டியல்"

    • வாடிப்பட்டி அருகே கண்காணிப்பு காமிரா இல்லாத கோவில்களை குறிவைத்து அடுத்தடுத்து உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.
    • இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் வெவ்வேறு கும்பலா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை கிராமம் உள்ளது. இங்கு பாண்டிய மன்னரால் கட்டப்பட்டதாக கருதப்படும் பழமையான மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உள்ளது. இந்த கோவில் கொடி மரம் அருகே 3 அடி உயர உண்டியல் வைக்கப் பட்டுள்ளது.

    நேற்று இரவு பணியாளர்கள் பூஜைகள் முடிந்ததும் பூசாரி, பணியாளர்கள் கோவிலை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை மீண்டும் கோவிலை திறந்த போது வாயிலின் முன்புறமுள்ள கொடிமரம் அருகே வைக்கப்பட்டிருந்த உண்டியல் திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் அருகில் சென்று பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்த பணம் திருடப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையில் அருகில் உள்ள தாதம்பட்டி கிராமத்தில் மேட்டுப் பெருமாள் நகரில் அமைந்துள்ள நீலமேக பெருமாள் கோவிலில் வைக்கப்பட்டிருந்த 2 அடி உயர உண்டியலில் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டதாக தகவல் வந்தது.

    2 கோவில்களிலும் இருந்த உண்டியல்களில் இருந்து எவ்வளவு பணம்? திருடப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இல்லை.

    ஒரே நாள் நள்ளிரவில் மர்ம நபர்கள் அடுத்தடுத்து கோவில்களின் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த கொள்ளை சம்ப வங்கள் குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 2 கோவில்களிலும் கண்காணிப்பு காமிரா பொருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    கொள்ளையர்கள் இதனை நோட்டமிட்டு திட்டமிட்டு 2 கோவில்களிலும் கொள்ளையடித்து சென்றார்களா? அல்லது இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் வெவ்வேறு கும்பலா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே நாள் இரவில் அருகருகே உள்ள 2 கிராமங்களின் பழமையான கோவில்களில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பின்னலூர் கிராமத்தில் வீரன் கோவில் உள்ளது.
    • கோவில் பூசாரி கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அடுத்த பின்னலூர் கிராமத்தில் வீரன் கோவில் உள்ளது. இங்கு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாள் பூஜை சில நாட்களுக்கு முன்பு முடிந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் பூசாரி கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். நேற்று காலையில் கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் வேறு இடத்தில் சிதறி கிடந்தது.

    மேலும் கோவிலின் கலசத்தை எடுத்து பக்கத்தில் வைத்து விட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து சேத்தியாதோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கோவில் உண்டியலில் இருந்து ரூ.10 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் பணத்தை எடுத்துக் கொண்டு கோவில் உண்டியலை ஓடையில் வீசி சென்ற கொள்ளையர்கள்.
    • ராமநத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களின் உண்டியல்களை மர்மநபர்க ள் திருடிச் சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலின் உண்டியல் கடந்த 16-ந்தேதி மர்மநபர்களால் திருடப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல ராமநத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களின் உண்டியல்களை மர்மநபர்க ள் திருடிச் சென்றனர். இந்த கொள்ளை சம்ப வங்கள் குறித்து துப்பு கிடைக்காததால், கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் ராமநத்தம் போலீசார் திணறி வருகின்றனர்.

    வாகையூர் அருகேயுள்ள ஆக்கனூர் கிராமத்தில் ஓடை உள்ளது. இதனை சுற்றியுள்ள நிலங்களில் களை எடுக்க பெண்கள் சென்றனர். அப்போது ஓடை அருகே உடைந்த நிலையில் ஒரு உண்டியல் கிடந்தது. அருகில் சென்று பார்த்த போது உண்டியல் மீது வாகையூர் செல்லியம்மன் கோவில் உண்டியல் என எழுதப்பட்டிருந்தது. இது குறித்து வாகையூர் கிராம பிரமுகர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்தனர். உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்ட கொள்ளையர்கள், உண்டியலை ஆக்கனூர் ஓடை அருகே வீசி சென்றிருக்கலாம் என கிராம பிரமுகர்கள் அனுமானித்தனர். இதையடுத்து ஓடையில் இருந்த உண்டியலை மீட்டு கோவிலுக்கு கொண்டு வந்தனர். மேலும், இது குறித்து ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    • உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
    • கிரில் கேட் அருகிலேயே உண்டியலை இழுக்க பயன்படுத்தப்பட்ட இரும்பு ராடும் கிடந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் எம்.ஆர்.கே. நகரில் செல்வவினாயகர் கோவில் உள்ளது. இக்கோ விலுக்கு இன்று காலை 6 மணியளவில் சாமி கும்பிட பக்தர்கள் வந்தனர். கோவில் முடியிருந்ததால் வெளியில் இருந்து சாமி கும்பிட்டனர். அப்போது கோவிலின் மையப்பகுதியில் வைக்கப் பட்டிருந்த உண்டியல், கோவில் உட்பிரகாரத்தின் ஓரமுள்ள கிரில் கேட் அருகில் இருந்தது. அருகில் சென்று பார்த்த பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளை யடிக்கப்பட்டி ருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தனர்.

    இது குறித்து விருத்தாசலம் போலீசாருக்கும், ஊர் பிரமுகர்களுக்கும் பக்தர்கள் தகவல் கொடுத்தனர். தக வலின் பேரில் விரைந்து வந்த ஊர் பிரமுகர்கள் கோவில் பூட்டை திறந்து உள்ளே சென்றனர். அங்கு உடைக்கப்பட்டிருந்த உண்டி யலில் இருந்த ரூபாய் நோட்டு கள் மட்டும் கொள்ளை யடிக்கப்பட்டிருந்தது. சில்ல ரை நாணயங்கள் அங்கேயே கிடந்ததை கண்டனர். கோவிலின் நடுமை யத்தில் இருந்த உண்டியலை, முன்பகுதி வளைக்கப்பட்ட இரும்பு கம்பியால் கிரில் கேட் அருகே இழுத்து. உண்டி யலை உடைத்து பணம் கொள்ளை யடிக்கப்பட்டி ருந்ததை ஊர் பிரமுகர்கள் கண்டுணர்ந்தனர். மேலும், கிரில் கேட் அருகிலேயே உண்டியலை இழுக்க பயன்படுத்தப்பட்ட இரும்பு ராடும் கிடந்தது.

    சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார், இது தொடர்பாக அங்கிருந்த வர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். கோவில் உண்டியல் கடந்த 9 மாதத்திற்கு மேலாக திறக்கப் படாததால் சுமார் ரூ.1 லட்சம் காணிக்கை பணம் இருந்திருக்கலாம் என்று ஊர் பிரமுகர்கள் கூறினார்கள். வரும் 18-ந் தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இந்த காணிக்கை பணத்தை பயன்படுத்த ஊர் பிர முகர்கள் திட்டமிட்டிருந்த தும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப் பட்டது. அங்கிருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர். சிறிது தூரம் சென்ற மோப்பநாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கோவிலின் உண்டியலை தொடர்ந்து கண்காணித்து வந்த மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.கே. நகரில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர். குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் உள்ள கோவிலில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கோவிலுக்குள் வைக்கப்பட்டிருந்த உண்டியலுக்குள் தீப்பிடித்து எரிந்து புகை வந்ததை கண்டனர்.
    • இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே மொளச்சூரில் புகழ்பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. நேற்று மாலை 5 மணியளவில் இக்கோவில் வளாகத்தில் இருந்து கரும்புகை வெளிவந்தது. அவ்வழியே சென்றவர்கள் இதனைப் பார்த்து கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கோவிலுக்குள் வைக்கப்பட்டிருந்த உண்டியலுக்குள் தீப்பிடித்து எரிந்து புகை வந்ததை கண்டனர். அவர்கள் ஊர் பிரமுகர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் கிளியனூர் போலீசார், தீயணைப்பு படையினர் கோவிலுக்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை திருட முயற்சித்தது தெரியவந்தது. மேலும், உண்டியலை திறக்க முடியாததால், காகிதத்தில் தீ வைத்து உண்டியலுக்குள் போட்டிருக்கலாம் என போலீசாருக்கு தெரியவந்தது. இதில் உண்டியலுக்குள் இருந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் தீயில் கருகியிருக்கலாம் எனவும், நாணயங்கள் மட்டுமே இருக்க வாய்ப்பிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இது குறித்து இந்து அறநிலையத் துறையின் திண்டிவனம் ஆய்வாளர் தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியலுக்குள் தீ வைத்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • அன்றாட பூஜைக்காக இன்று காலை பூசாரி விஜயன் கோவிலை திறந்து உள்ளே சென்றார்.
    • பணம் திருடு போய் இருந்ததை பார்த்த பூசாரி, கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகர மையத்தில் கீழ்பெரும் பாக்கம் பகுதியில் 475 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் தீமிதி விழா கடந்த பங்குனி மாதம் நடைபெற்றது. இந்நிலையில் கோவிலில் நடைபெறும் அன்றாட பூஜைக்காக இன்று காலை பூசாரி விஜயன் கோவிலை திறந்து உள்ளே சென்றார். அப்போது கோவில் உள்ளே இருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடு போய் இருந்தது. இதை பார்த்த பூசாரி, கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும், விழுப்புரம் டவுன் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த விழுப்புரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருட்டு நடந்த கோவிலில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்திய பணம், நகை திருடு போய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி திருடி வருகின்றனர்.

    • கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடப்பட்டது.
    • சப்- இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சங்கரன் கோவில் அருகே உள்ள ஐ.என்.டி. யு.சி. நகரில் சிங்கத்து இருளப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பூசாரி மாரியப்பன் பூஜை களை முடித்துவிட்டு இரவு கோவில் கதவை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் இன்று காலை மாரியப்பன் பூஜைக்காக கோவில் கதவை திறப்பதற்காக வந்தார்.

    அப்போது கோவில் கதவு உடைத்து அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப் பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தன்னார்வ பொறுப்பு தக்கார் ராஜா விற்கு, மாரியப்பன் தகவல் கொடுத்தார். அதன் பேரில் தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சார்லஸ், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிலில் இருந்த ஒரு உண்டியல் திருடப்பட்டு இருந்தது
    • போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    தாளவாடி:

    தாளவாடி அருகே உள்ள ஓங்கன் புரம் என்ற ஊரில் சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோவில் பூசாரி வழக்கம் போல கோவிலை பூட்டி சென்றார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோவிலில் இருந்து சத்தம் கேட்டது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடிவந்து பார்த்தனர்.

    அப்போது கோவிலில் இருந்த 2 உண்டியலில் ஒரு உண்டியல் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தாளவாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது திருடப்பட்ட உண்டியலில் சுமார் ரூ.10 ஆயிரம் இருக்கலாம் என்று தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பத்ரகாளிஅம்மன்கோவிலின்தர்மகத்தா கார்த்திகேயன் நேற்று இரவு பூஜை முடித்து கோவிலை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார்
    • இன்று காலை 6 மணிக்கு வந்து பார்த்தபோதுஇரும்பு உண்டியலைஉடைக்க முடியாமல் அப்படியே விட்டு விட்டு ஓடி விட்டதும் தெரிய வந்தது

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி நடைபெற்றது. விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தில் பத்ரகாளிஅம்மன் கோவில். உள்ளது.இந்த கோவிலின் தர்மகத்தா கார்த்திகேயன் நேற்று இரவு பூஜை முடித்து கோவிலை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலை 6 மணிக்கு வந்து பார்த்தபோது கோவில் முன் பகுதியில் சிமெண்ட் தரையில் புதைத்து வைக்கபட்டிருந்த இரும்பு உண்டியலையாரோ மர்ம நபர்கள் இரவு கடப்பாரையால் குத்தி உடைக்க முயற்சி செய்ததும், அதனை உடைக்க முடியாமல் அப்படியே விட்டு விட்டு ஓடி விட்டதும் தெரிய வந்தது. கோவிலில் இருந்த பொருட்கள் ஏதும் திருட்டு போகவில்லை.

    இது குறித்து இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் கோயில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பபட்டது.
    • விசாரணையில் அண்ணன்- தம்பி இருவரும் சேர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீப காலமாக கோயில்களில் உள்ள உண்டியல்கள் உடைக்கப்பட்டு உண்டியல் பணம் கொள்ளைய டிக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் செம்பனார்கோயில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோயில், மணக்குடி பொறையன் கோயிலில் உள்ள உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளைய டிக்கப்பட்டது.

    இது குறித்த புகாரின் பேரில் மாவட்ட தனிப்படைப்பு போலீசார் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் உண்டியல் கொள்ளை போன கோயில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் கீழப்பெரும்பள்ளத்தைச் சேர்ந்த ஜெயராமனின் மகன்கள் வடிவேலு (24) பாபு (23) ஆகிய இருவரும் சேர்ந்து உண்டியல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    உடனடியாக இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்

    . விசாரணையில் அண்ணன்- தம்பி இருவரும் சேர்ந்து மாவட்டத்தில் உள்ள 10 மேற்பட்ட கோவில் உண்டியல்களை உடைத்து திருட்டு சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    அவர்களிடமிருந்து 4000 ரொக்க பணம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கோயில் வளாகத்தில் உள்ள 5 உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
    • உண்டியலில் பக்தர்கள் செலுத்திய தங்கம் 19-கிராம், வெள்ளி 40 கிராம் கிடைத்துள்ளது.

    கடலூர்:

    பிரசித்தி பெற்ற சிதம்பரம் தி ல்லைக்காளியம்மன் கோவிலில் இந்து அறநிலை யத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் சரண்யா, ஆய்வாளர் நரசிங்க பெருமாள் ஆகியோர் முன்னிலையில் கோயில் வளாகத்தில் உள்ள 5 உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கோவில் அலுவலர்கள் ராமலிங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 4 லட்சத்து 40 ஆயிரத்து 648 கிடைத்தது. மேலும் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய தங்கம் 19-கிராம், வெள்ளி 40 கிராம் கிடைத்துள்ளது. வெளிநாட்டு பணம் சிங்கப்பூர் டாலர் 107, மலேசியா ரிங்கட்-65, ஓமன் அரை ரியால், இலங்கை பணம் ரூ.1000 ஆகியவை இருந்தன.

    • முத்தையாபுரத்தில் உள்ள ஆதிபராசக்தி நகரில் சக்தி விநாயகர் ஆலயம் உள்ளது.
    • உண்டியல் பூட்டை மர்மநபர் ஒருவர் கடப்பாறையால் உடைத்து திறக்க முயன்றுள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள ஆதிபராசக்தி நகரில் சக்தி விநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் அய்யப்பன் விக்ரஹம் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்ற நிலையில் நேற்று நள்ளிரவு மர்மநபர் ஒருவர் கோவிலுக்குள் புகுந்துள்ளார். அவர் உண்டியல் பூட்டை கடப்பாறையால் உடைத்து திறக்க முயன்றுள்ளார்.

    ஆனால் அவரால் உடைக்க முடியவில்லை. இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் கோவிலுக்கு வரவே, அங்கிருந்து மர்மநபர் தப்பி சென்றுவிட்டார். இதுதொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×